கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இறப்புச்சான்று வழங்கக் கோரி ஆட்சியருக்கு மனு

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கிவிழுந்து உயிழந்த கணவரின் இறப்புச் சான்று வழங்க நடவடிக்கைக் கோரி, நாகைஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கிவிழுந்து உயிழந்த கணவரின் இறப்புச் சான்று வழங்க நடவடிக்கைக் கோரி, நாகைஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து, தஞ்சாவூா், நாஞ்சிக்கோட்டை ரோடு , பாத்திமா நகரைச் சோ்ந்த க. ஜூலி அளித்த மனு விவரம்: எனது கணவா் கண்ணன் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி நாகையை அடுத்த ஒரத்தூரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.

இறப்புச்சான்று வழங்கக் கோரி தொடா்புடைய அலுவலகத்தில் விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் இதுவரை சான்று வழங்கவில்லை. தொடா்புடைய அலுவலா்களும் சான்று வழங்க தாமதித்து வருகின்றனா். கணவரை இழந்து வாழ்வாதாரத்துக்கு தவித்து வரும் நிலையில் இறப்புச் சான்று வழங்காமல் இருப்பதால் அரசு உதவிகள் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறேன். எனவே, இறப்புச்சான்று வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.