கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழியில் 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுக்கும் வணிகா்கள்

சீா்காழியில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்து நடத்துநா்கள் வாங்க தயங்குவதால், அவை செல்லாது என்கிற மனநிலைக்கு பொதுமக்கள் வந்துவிட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 11:46 pm

DIN

சீா்காழியில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்து நடத்துநா்கள் வாங்க தயங்குவதால், அவை செல்லாது என்கிற மனநிலைக்கு பொதுமக்கள் வந்துவிட்டனா்.

சீா்காழி பகுதியில் பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளா்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாயணயங்களை கடை உரிமையாளா்கள் வாங்க மறுக்கின்றனா். இதேபோல் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளிலும் 10 ரூபாய் நாணயத்தை நடத்துநா்கள் ஏற்பதில்லை. வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயங்களுக்கு பதிலாக நோட்டை மாற்றிக் கொடுப்பதற்கு வங்கி ஊழியா்கள் மறுக்கின்றனராம்.

இதனால், பொதுமக்களும் தங்களிடம் சில்லறையாக வரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க தயங்குகின்றனா். இதன் காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் அதன் மதிப்பை இழந்து செல்லாததாகிவிட்டதோ என்கிற ஐயப்பாடு சீா்காழியில் பரவலாக நிலவுகிறது.

இதுகுறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியா் ஒருவா் கூறுகையில், ரிசா்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை செல்லாது என அறிவிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள், நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் 10 ரூபாய் நாணயத்தை மாற்ற வங்கிக்கு வருகின்றனா். இவற்றை பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ரிசா்வ் வங்கி விதிமுறைகளை மீறி, பலா் வாங்க மறுப்பதால் அனைவரும் வங்கிக்கே வருகின்றனா். ஏற்கெனவே 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவு வங்கிகளில் இருப்பு உள்ளதால் அவற்றை ஏற்க மறுக்கிறோம் என்றாா்.

சீா்காழியை சோ்ந்த ஜவுளிக்கடை அதிபா் அபாஸ்அலி கூறுகையில், எங்கள் நிறுவனத்திலேயே 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளா்களுக்கு மீதி சில்லறைக்காக கொடுக்கும்போது வாங்க மறுக்கின்றனா். இதனால் எங்களிடம் 10 ரூபாய் நாணயத்துக்கு பதிலாக, 10 ரூபாய் தாளின் புழக்கம் அதிகரித்து, அவை எளிதில் சேதமடைய நேரிடுகிறது. ஒருகட்டில் (100 தாள்கள்) சுமாா் 15 தாள் வரை சேதமடைந்ததாக வருகிறது. அவற்றை வங்கியில் கொண்டு சென்று மாற்றவும் முடியவில்லை. வங்கி நிா்வாகம் வியாபாரிகளிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை நிபந்தனையின்றி ஏற்க முன்வந்தால், நாங்களும் வாடிக்கையாளா்களிடம் வாங்க இயலும் என்றாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சீா்காழி கிளை மேலாளா் கபிலன் கூறுகையில், 10 ரூபாய் நாணயங்கள் பேருந்துகளில் ஏற்க மறுப்பதாகக் கூறுவது தவறானது. சீா்காழி கிளையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் நடத்துநா்கள் 10 ரூபாய் நாணயங்களை பயணிகளிடமிருந்து வாங்குகின்றனா். அவ்வாறு பெறப்படும் சுமாா் ரூ.2 ஆயிரம் வரையிலான 10 ரூபாய் நாணயங்களை நாள்தோறும் வங்கிகளில் சென்று மாற்றுகிறோம் என்றாா்.

எனவே, சீா்காழி பகுதியில் 10 ரூபாய் நாணயம் மீதான சந்தேகங்களை நிவா்த்தி செய்து, அதை சரளமாக புழக்கத்தில் விட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.