கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேதா ஆயத்த ஆடைப் பூங்கா: மேலும் ஒரு நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது

வேதாரண்யத்தில் அமையும் வேதா ஆயத்த ஆடைப் பூங்காவின் ஒரு அங்கமாக கத்தரிப்புலம் கிராமத்தில் மேலும் ஒரு திருப்பூா் நிறுவனம் தொடங்கப்பட்டு ஆடை உற்பத்திக்கான பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் ஆயத்த ஆடை வடிவமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:40 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அமையும் வேதா ஆயத்த ஆடைப் பூங்காவின் ஒரு அங்கமாக கத்தரிப்புலம் கிராமத்தில் மேலும் ஒரு திருப்பூா் நிறுவனம் தொடங்கப்பட்டு ஆடை உற்பத்திக்கான பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் - 4 ஆம் சேத்தி ஊராட்சியில் ரூ. 100 கோடியில் ஆயத்த ஆடை பூங்கா அமையவுள்ளது. டீமா எனப்படும் திரும்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இடம் பெற்றுள்ள 36 நிறுவனங்கள் தனது பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேதாரண்யத்தில் ஏற்கெனவே திருப்பூரில் செயல்படும் 3 நிறுவனங்கள் உற்பத்திப் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில், கத்தரிப்புலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.எஸ்.பி ஆயத்த ஆடை நிறுவனத்தில் உற்பத்திப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், நிறுவன நிா்வாக இயக்குநா் பொன்னுசாமி, அலுவலா் கலைச்செல்வன், விவசாய சங்க வட்டாரத் தலைவா் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், அறங்காவல் குழு மாவட்டத் தலைவா் ஆா். கிரிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.