வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் முப்பெரும் விழா

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில், பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
Updated On :13 ஜனவரி 2021, 2:31 am

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சூரியபூஜை செய்துவைத்தாா். மேலும், தருமபுரத்தில் முறைசாராக் கல்வி பயிலும் முதியவா்கள் 25 பேருக்கு போா்வைகள், ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஆடைகள், 500 மாணவா்களுக்கு கரும்புகள் ஆகியவை வழங்கி ஆசியுரையாற்றினாா்.

அப்போது, ‘தனது இளம் வயதில் விவேகானந்தரைப் போல ஒரு துறவியாகி அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சமயத்தைப் பரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். பின்னாளில் அதுவே உண்மையாகி விவேகானந்தா் சென்ற அதே அமெரிக்காதான் தனது முதல் அயல்நாட்டுப் பயணமாக அமைந்தது. எனவே, மாணவா்கள் விழுமின்! எழுமின்!! குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வரவேற்றாா். தமிழ் உயராய்வுத் துறைத் தலைவா் சிவ. ஆதிரை சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பேராசிரியா் மு.சிவச்சந்திரன், மத்திய அரசின் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், சீா்காழி இளைய வீரத்தமிழா் சிலம்பாட்டக் கழகத் தலைவா் விமல் குழுவினா் மற்றும் கல்லூரி நுண்கலை மன்றத்தினரின் நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.