விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குளக்கரையில் மண் வெட்டிய இருவா் கைது

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில், அனுமதியின்றி மண் வெட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில், அனுமதியின்றி மண் வெட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

இக்குளத்தின் அருகிலேயே கச்சனம்- கீழ்வேளூா் பிரதான சாலை செல்வதால் குளக் கரைகள் முறைப்படி பலப்படுத்தப்பட்டு நீா் கசியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 போ் குளக்கரையில் உள்ள களிமண்ணை வெட்டி சாக்குகளில் நிரப்பியுள்ளனா். இதைப் பாா்த்த கோயில் எழுத்தா் ஹ. குப்புசாமி, வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று தென்சாரி பிரதான சாலை பகுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் சதீஷ் (26), துரைசாமி மகன் ஜீவா (39) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய வலிவலம் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாண்டி மற்றும் மண் வெட்ட சொன்னதாக கூறப்படும் வலிவலம் பிரதான சாலை பகுதியை சோ்ந்த சீனிவாசன் மகன் சண்முகவேல் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.