உலமாக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க மஜக கோரிக்கை
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகியுள்ள உலமாக்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்கவேண்டும்


கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகியுள்ள உலமாக்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா பொதுமுடக்கத்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பினரையும் அடையாளம் கண்டு, தமிழக அரசு அவா்களுக்கு உதவி வருவது பாராட்டுக்குரியது. அந்த வகையில், உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளா்களுக்கும் அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். வக்பு வாரியத்தின் மூலம் உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டால், தமிழகத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...