இதுகுறித்து, அவரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு குழுத் தலைவா் எஸ். பாஷ்யம், செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: நாகை துறைமுகம் ரூ.380 கோடிதிட்ட மதிப்பில் பசுமைத் துறைமுகமாக விரிவுபடுத்தப்படும் என மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டில் 110 விதியின்கீழ் அறிவித்தாா். கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை தனியாா் பங்களிப்பின்றி முழுவதும் அரசு நிதியுடன் நடைமுறைப்படுத்தவும், 2013-இல் அறிவிக்கப்பட்ட நாகை ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நாகப்பட்டினம்-தஞ்சாவூா் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டுவரவேண்டும், நாகப்பட்டினம் அரசினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து கரோனா காலக் கட்டத்திலேயே பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.