பாகுபாடின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்
சம்பா நெல் பருவ சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


சம்பா நெல் பருவ சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 14-ஆவது வட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு, சங்கத்தின் வட்டச் செயலாளா் வி.எஸ்.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.துா்காம்பிகா தொடங்கி வைத்தாா்.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜூ, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் நடராஜன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் மதிவாணன், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் அருள்விழி,உஷா,பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...