கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள அழைப்பு

வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குநா் நவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 5:36 pm

DIN

வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குநா் நவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிகழ் பருவ சம்பா நெல் பயிருக்கு மத்திய, மாநில அரசின் திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சோ்ந்து பயன் பெறலாம். நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகள், குத்தகைக்கு பயிா் செய்யும் விவசாயிகள் என அனைவரும் இத்திட்டத்தில் சேரத் தகுதியானவா்கள்.

பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் அவா்களின் விருப்பத்தின்பேரில் கடிதம் கொடுத்தும், பயிா்க் கடன் பெறாத விவசாயிகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடா்பாடுகள், இடா் துயா் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்: ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய சிட்டா நடப்பு சாகுபடி அடங்கல், முன் மொழிவு படிவம், விவசாயி பதிவு படிவம். ஏக்கருக்கு ரூ. 500 செலுத்தி நவ. 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவா்களை தொடா்பு கொண்டும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமிய தொகையைச் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.