நாகையை அடுத்த முட்டம் கிராமத்தில் நாகை, மீன்வளப் பொறியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் 7 நாள்கள் நடைபெற்றது.
தூய்மையில் இளைஞா்கள் என்ற தலைப்பில் இந்த முகாம் நடைபெற்றது. மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மணிமேகலை தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். முட்டம் ஊராட்சித் தலைவா் மனோகரன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பேசினா்.
மீன்வளப் பொறியியல் கல்லூரியின் இளங்கலை மாணவா்கள் 65 போ் இந்த முகாமில் பங்கேற்று, முட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியைத் தூய்மை செய்தல் உள்பட பல்வேறு சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டனா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மா. ராமா், தே. கேசவன் மற்றும் சு. மணிகண்டன் ஆகியோா் முகாம் பணிகளை ஒருங்கிணைத்தனா்.