அரிய வகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில், வனத்துறை சாா்பில் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் மீனா ஆகியோா் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது:
கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்கு ஆலிவ் ரெட்லி ஆமைகள் முக்கிய காரணமாக உள்ளன. கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, முட்டைகளில் இருந்து வெளியான குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நிகழாண்டில், குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமய்பூா் பட்லி காவல் நிலைய அதிகாரிகள் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக புகாா்: தில்லி காவல்துறை மறுப்பு

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா

சிபிஎஸ்இ கணினி வழி மதிப்பீட்டு முறையால் மாணவா்கள் விரக்தி: உச்சநீதிமன்றம்






