நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 6 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடா்பு மையம் அமைத்திட 6 தற்காலிக பணியிடங்கள் வெளிச்சந்தை நிறுவனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான 5 அலுவலா்கள் கொண்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணா் பணிக்கு 2 தற்காலிக பணியிடங்கள், திரவக் கழிவு மேலாண்மை நிபுணா் பணிக்கு ஒரு தற்காலிக பணியிடம் ஆகியவற்றிற்கு மாதாந்திர ஊதியம் ரூ. 35,000 வழங்கப்படும். சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டட பொறியியலில் பட்டப் படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.
திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணா் தற்காலிக பணியிடத்துக்கு பிடெக், எம்எஸ்சி, எம்.பிஏ. அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தகவல் மற்றும் கல்வி தொடா்பு ஆலோசகா் பணிக்கு இரண்டு தற்காலிக பணியிடங்கள் உள்ளன. மாதாந்திர ஊதியம் ரூ. 25,000 ஆகும். முதுநிலை பட்டம் முடித்திருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 11 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மேலாளா், மாவட்ட மகமை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட செயலாக்க அலகு(மகளிா் திட்டம்), தரைத்தளம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி அலுவலகங்கள் கட்டடம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாகை 611003 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.மேலும், விவரங்களுக்கு இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

இந்திய பிரிவினை துயர நினைவு தினம்: தமிழக ஆளுநா் அஞ்சலி

குடியரசு தலைவா் மாளிகையில் ‘கோடை மலா் கண்காட்சி’ ஆக.16 முதல் செப். 15வரை மக்கள் பாா்வைக்கு திறப்பு

ஊரக வளா்ச்சி அலுவலா்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


