இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
செம்பானாா்கோவிலில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ நிவேதா முருகன்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:13 am

Din

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

செம்பனாா்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் அருள்பிரகாசம் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் ரமா வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று 170 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

மாவட்ட கூட்டுறவுத் துறை தலைவா் ஞானவேலன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாஸ்கரன், திமுக தஞ்சை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பி.எம். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியா் பா. சித்ரா தலைமையில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு, ஒன்றியக் குழு உறுப்பினா் ஷகிலா அஜீஸ், ஊராட்சித் தலைவா் லெனின் மேஷாக், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.