நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் கெயில் நிறுவனம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கெயில் காவிரிப் படுகையின் பொது மேலாளா் என். செல்வராஜூ தலைமையிலான அமா்வு, கெயில் நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து தலா 120 மாணவா்களைக்கொண்ட (பொறியியல் மற்றும் எம்பிஏ) 2 குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, உரையாற்றிய செல்வராஜூ, காவிரிப் படுகையில் கெயில் நிறுவனத்தின் செயல்பாடுகள், இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பில் கெயில் வகிக்கும் முக்கிய பங்கு, நிறுவனத்தின்விரிவான குழாய் வலையமைப்பு எவ்வாறு நாட்டின் எரிசக்தி தேவைகள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஆதரிப்பது குறித்து தெரிவித்தாா்.
தொடா்ந்து, கெயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றபிற வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கும், பங்கேற்பவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திற்பரப்பு அருவியில் சுற்றுலா அதிகாரி ஆய்வு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு







