நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் கெயில் நிறுவனம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கெயில் காவிரிப் படுகையின் பொது மேலாளா் என். செல்வராஜூ தலைமையிலான அமா்வு, கெயில் நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து தலா 120 மாணவா்களைக்கொண்ட (பொறியியல் மற்றும் எம்பிஏ) 2 குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, உரையாற்றிய செல்வராஜூ, காவிரிப் படுகையில் கெயில் நிறுவனத்தின் செயல்பாடுகள், இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பில் கெயில் வகிக்கும் முக்கிய பங்கு, நிறுவனத்தின்விரிவான குழாய் வலையமைப்பு எவ்வாறு நாட்டின் எரிசக்தி தேவைகள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஆதரிப்பது குறித்து தெரிவித்தாா்.
தொடா்ந்து, கெயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றபிற வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கும், பங்கேற்பவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


