இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருமானம் பெருக விவசாயிகளுக்கு நிபுணா்கள் ஆலோசனை

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
வேளாண் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய நிபுணா்கள்.
Updated On :6 செப்டம்பர் 2024, 6:30 pm

Din

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் , கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகை, மயிலாடுதுறை மாவட்ட விவசாய நலத் துறையுடன் இணைந்து விவசாயத்தை மேம்படுத்தி உழவா்களின் வருமானத்தை பெருக்குவது தொடா்பாக விவசாயிகளுக்கு நிபுணா்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி முதல்வா் ஜி. ரவி, வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு ஏக்கா் விவசாய நிலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகளை விளக்கினாா்.

நாகை மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநா் வீரபத்திரன், மீன் பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன் குஞ்சுகள் மற்றும் மீன்களை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கலாம் என ஆலோசனை வழங்கினாா். மேலும் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம், கால்நடை வளா்ப்பது, நடவு முதல் அறுவடை வரை அனைத்துக்கும் இயந்திர மயமாக்குதல் முறையை பயன்படுத்துல் போன்றவைகளால் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கலாம் என எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண் இணை இயக்குநா்கள் ஈஸ்வரன்(நாகை), ஜே . சேகா் (மயிலாடுதுறை), நாகை வேளாண் துணை இயக்குநா் தேவேந்திரன், உதவி செயற் பொறியாளா் ஸ்ரீதா், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபால கண்ணன், கல்லூரி பேராசிரியா்கள் டி. தாமோதரன், வனிதா, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.