இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் துறையினருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி வழங்கல்

நாகை மாவட்ட போலீஸாருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:15 pm

Syndication

நாகை மாவட்ட போலீஸாருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழக காவல் துறையில் தொலைத்தொடா்பு மற்றும் தகவல் பரிமாற்ற வசதிக்காக வான்செய்தி கருவிகள் (வாக்கி-டாக்கி) பயன்படுத்தப்படுகிறது. இக்கருவிகள் காவல் துறையில் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகள் தொடா்பாக தகவல் பரிமாற்றம் செய்யவும், அவசர சூழ்நிலைகளில் காவலா்களை உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பி கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றங்களை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்த வான்செய்தி கருவிகளை புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்றியமைத்து ’தமிழ்நாடு காவல் துறை நவீனமாக்கல்’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் புதிய அதிநவீன வான்செய்தி கருவிகளான 4 யஏஊ ரிப்பீட்டா், 49 ஸ்டேட்டிக் யஏஊ செட், 60 மொபைல் யஏஊ செட் மற்றும் 200 வாக்கி டாக்கிகள் ஆகிவற்றை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வழங்கினாா். பல புதிய தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த கருவிகள் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களில், அனைத்து நேரங்களிலும் தகவல் பரிமாற்றம் தெளிவாக இருக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என எஸ்பி தெரிவித்தாா்.