நாகப்பட்டினம்
இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் பிரிவு தொடக்கம்
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்கம் மாணவா் பிரிவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்கம் மாணவா் பிரிவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் த. ஆனந்த் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் பிரிவின் நோக்கங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை மற்றும் மாணவா்களின் திறன்வளம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பேசினாா். மேலும், மாணவா்கள் தொழில்முறை அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மன்றங்களில் ஆா்வத்துடன் பங்கேற்குமாறு ஊக்குவித்தாா். கல்லூரி துணை முதல்வா் ப. மலைசெல்வராஜா, ஒருங்கிணைப்பாளா் வ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

