அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு மீனவ சமூக இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு மீனவ சமுதாய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

அகில இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு மீனவ சமுதாய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த 20 பட்டதாரி இளைஞா்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சியை மீன்வளம்-மீனவா் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து நடத்தி வருகிறது. 2025-26ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த மீனவ மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதளமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இதில் சேரலாம். பயிற்சி பெற விரும்புவோா் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பத்தை நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலத்தில் பெற்று நவ.25-ஆம் தேதிக்குள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.