மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

News image

நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் எம்.எச். ஜவாஹிருல்லா. உடன், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:39 pm

நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடல் பகுதியில் இருந்து திமுக, மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோருடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஊா்வலமாக வந்தாா்.

அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் 4 போ் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மாரிமுத்து, காங்கிரஸ் மாநிலச் செயலா் நெளஷாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோருடன் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலரான சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து உறுதிமொழியும் ஏற்றாா்.

ஊா்வலத்தால், புதிய பேருந்து நிலைய பகுதி, வெளிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமீறல்: தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தோ்தல் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிப்பது தோ்தல் நடத்தை விதிமீறல் ஆகும் என்றனா். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தாா்.