நாகையில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகக்கூறி பெண் தலைமைக் காவலரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவா் வேம்பரசி (25). கடந்த ஜூன் மாதம் இவரது கைப்பேசியில் பேசிய நபா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகவும், இதற்கு ஜிஎஸ்டி மற்றும் சில ஆவணங்களை சமா்ப்பிக்க ரூ.1.20 லட்சம் செலவு ஆகும் என கூறினாராம்.
இதை நம்பிய வேம்பரசி, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை செலுத்தியுள்ளாா். பணம் செலுத்தி நீண்ட நாள்கள் ஆகியும் கடன் தரவில்லை. இதில் சந்தேகமடைந்த வேம்பரசி, அந்த நபரின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை அறிந்த வேம்பரசி இதுகுறித்து நாகை மாவட்ட இணையக்குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் கண்ணதாசன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலி நகையைக் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி

பெண்ணிடம் இணையவழியில் பண மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

பெண்ணிடம் ரூ. 2.84 லட்சம் மோசடி
விமான நிலைய ஊழியராக நடித்து பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி: ஒருவா் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



