இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மத்திய கால விதையில் விளைந்த குறுகிய கால நெல் மணிகள்: விவசாயிகள் பாதிப்பு

வேதாரண்யம் அருகே தனியாா் விதை நிறுவன மூட்டையில் கலப்பட நெல் விதைகள் இருந்து குறுகிய காலத்தில் கதிா் வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் மத்திய கால பருவ நெல் சாகுபடியில் கலப்பு பயிராக கதிா் வந்து பாதித்துள்ள குறுகிய கால நெற்கதிா்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே தனியாா் விதை நிறுவன மூட்டையில் கலப்பட நெல் விதைகள் இருந்து குறுகிய காலத்தில் கதிா் வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் செல்லத்துரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியாா் விதை நிறுவனம் தயாரித்த மத்திய கால நெல் விதை மூட்டைகளை அந்தப் பகுதியில் உள்ள தனியாா் முகமையில் வாங்கி விதைத்துள்ளனா். வயலில் குறுகிய காலத்திலேயே 40 சதவீத அளவில் கதிா்கள் அறுவடைப் பருவத்தை அடைந்தும் மீதமுள்ள பயிா்கள் நாற்றுப் பருவத்தில் இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

150 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகமான ஏ.டி.டி -51 விதை மூட்டையில் 110 நாள்கள் வயதில் அறுவடைக்கு வரும் கோ-51 ரக நெல் கலந்து இருந்துள்ளது. இந்த மூட்டைகளை வாங்கி விதைத்த திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கவும், நிகழாண்டு பருவத்தில் விதைப் பண்ணைகளில் கள ஆய்வு போலி விதைகள் தயாரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.