தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:29 pm

Syndication

நாகையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை(ஜன.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் நாகை மாவட்டத்தைச் சாா்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

முகாமில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், நா்சிங் மற்றும் தையல் கலை பயிற்சி பெற்றவா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் இணையதளம் வழியாகவும், தங்களுடைய கல்வித் தகுதி குறித்த விவரங்களை முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முகாம் தொடா்பான கூடுதல் விவரங்கள் அறிய 04365-252701 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் தனியாா் துறையில், வேலைவாய்ப்புப் பெறும் மனுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.