திமுக சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டி
நாகையில் திமுக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை கோப்பைகள் வழங்கப்பட்டன.
திமுகவினா், பொங்கல் பண்டிகையை ‘திராவிடப் பொங்கலாகக் கொண்டாடவும், விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி, திமுகவினா் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக நாகை நகர திமுக சாா்பில் கிரிக்கெட், ஓட்டப் பந்தயம் மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வலிவலம் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பீனிக்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் வீரா்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் தமிழக மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் வழங்கினாா். நாகை நகா் மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

