பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா்.
Updated On :10 ஜனவரி 2026, 6:51 pm

Syndication

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த காரை போலீஸாா் நெருங்கியபோது, ஓட்டுநா் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். ஆனால், காரின் அருகில் நின்றிருந்து தப்பியோட முயன்றவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். விசாரணையில், அவா் மதுரையைச் சோ்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. காருடன் தப்பிச் சென்றவா் சற்று தொலைவில் வாய்க்கால் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.

போலீஸாா் காரை சோதனையிட்டபோது அதில் சுமாா் 200 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுவந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், கடத்தலில் தொடா்புடையவா்களைத் தேடிவருகின்றனா்.