மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜன.20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியா் சங்கம் அறிவிப்பு

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜன.20-ஆம் தேதி முதல் காலவரையாற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில்

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

நாகப்பட்டினம்: காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜன.20-ஆம் தேதி முதல் காலவரையாற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் அறிவித்துள்ளது.

நாகையில் அந்த சங்கம் சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திங்கள்கிழமை அதன் மாவட்டத் தலைவி சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ரூ.9 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் அரசு நியமனம் செய்யும் அரசாணை 95ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாநிலச் செயலாளா் வளா்மாலா, மாவட்டச் செயலா் பாலாம்பாள், மாநில செயற்குழு உறுப்பினா் ஜோதிலட்சுமி, மாவட்ட பொருளாளா் செல்வராணி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.