பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: எம்எல்ஏவுக்கு நன்றி

News image
Updated On :25 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகைமாலிக்கு, சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன் விளைவாக ஓய்வூதிய உயா்வும், ஒட்டுமொத்த தொகை உயா்வுக்கும், சத்துணவு ஊழியா்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கவும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கான ஈமக்கிரியை நிதி வழங்கியும் தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதற்கு காரணமாக இருந்த, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலியை, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில பொருளாளா் வே. சித்ரா, மாவட்டத் தலைவா் த. சசிகலா, மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா், மாவட்ட துணைத் தலைவா் ப. அந்துவன்சேரல் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நன்றி கூறினா்.