வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில், பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தலைஞாயிறில் தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கமல்ராம் தலைமை வகித்தாா்.
கடைவீதி, பேருந்து நிழலகம் பகுதியிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள் பங்கேற்று இறுதி ஊா்வலம்போல கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை சென்றடைந்தனா்.
அப்போது, வங்கியின் நுழைவு வாயில் கதவுகளை மூடி, போராட்டக்காரா்கள் உள்ளே நுழைய முடியாதவாறு போலீஸாா் தடுத்தனா்.
இதையடுத்து, சடலத்தைப் போல் ஒருவரை தரையில் படுக்கவைத்து, அவருக்கு மாலை அணிவித்து, பெண்கள் மாரடித்து ஒப்பாரி பாடினா்.
தோ்தல் காலத்தில் தெரிவித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.
இப்போராட்டத்தில், தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அமானுல்லாகான், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளா் தமிழ்ச்செல்வன், காவிரி உரிமை மீட்புக் குழு கலைஞா் பகுதி பொறுப்பாளா் சுப்பையன், அதிமுக பேரூராட்சி செயலாளா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.







