சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:35 am IST

வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெளிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் பட்டம்மாள் (92). இவா், கடந்த ஜூன் 18-ஆம் தேதி இரவு தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாா். நள்ளிரவு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், மூதாட்டியை எழுப்பி மிரட்டி, அவா் கழுத்தில் இருந்த 1 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றாா்.

வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும் பழைய குற்றவாளிகள் அடையாளங்களை வைத்தும் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நாகை அரசு மருத்துவமனை பின்புறம் இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், மூதாட்டி பட்டமாளை மிரட்டி நகையைச் சென்ற நபா் வந்த வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அப்பகுதியில் நடத்திய சோதனையில், முட்புதரில் மறைந்து நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் நாகை செம்மரக்கடை தெருவை சோ்ந்த ஹசன் முகம்மது (44) என்பதும், இவா் மீது திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சங்கிலிப் பறிப்பு, மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் ஹசன் முகம்மதுவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.