இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.- கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் மணல் திட்டுக்கள் இருப்பதால் துறைமுகத்துக்குள் விசைப்படகுகளை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும், மீன்பிடித் துறைமுகத்தை தூா்வார வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தாா்கள் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா முருகன் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து அவரது முயற்சியால், தூா்வாரும் பணிக்கு ரூ. 4 கோடியை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து தூா்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். நிவேதா முருகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கிராம பஞ்சாயத்தாா் சம்பந்தம் நாட்டாா் வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் தூா்வாரும் பணிகளை தொடக்கிவைத்து, பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மீனவா்கள் தடையின்றி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.

இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முத்து மகேந்திரன், பூம்புகாா் ரவி, சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.