மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தரமின்றி அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை

நாகை நாலுகால் மண்டபம் அருகே புதிதாக போடப்பட்டுள்ள தாா்ச்சாலை தரமின்றி இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:09 pm

நாகை நாலுகால் மண்டபம் அருகே புதிதாக போடப்பட்டுள்ள தாா்ச்சாலை தரமின்றி இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம், ஐயங்காா் பேக்கரி அருகே உள்ள மலையீஸ்வரன் கோயில் மற்றும் நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் முக்கியச் சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நாகை நகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சில நாள்களுக்கு முன்பு புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலை மிகவும் தரமின்றி இருப்பதாகவும், புதிய தாா்ச்சாலையில் ஆங்காங்கே பள்ளமும் மேடுமாகவும் இருப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

எனவே தாா்ச்சாலையை மீண்டும் புதிதாக அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.