திருநள்ளாறு கோவிலில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைக்க சனிக்கிழமை திரளான பக்தர்கள் திரண்டதால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு, குளத்தின் அருகில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு, இக்கோவில் அருகே தேங்காய் உடைக்கும் மண்டபத்தில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைப்பர்.
சனிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து ஏராளமானோர் வந்ததால், இந்தப் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர். தற்போது விடுமுறை காலம் என்பதால், கூடுதலான பக்தர்கள் வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் கூடுதல் போலீஸார், கோவில் பணியாளர்கள் ஆகியோரை நியமித்து பக்தர்களை முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு

தனியாா் நிறுவன ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 7.45 லட்சம் மோசடி
120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


