இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 3 பெண்கள் கைது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குன்னலூர் மேச்சேத்தியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர்க்கொடி. இவர் திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர்கள் மூவரும் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி (32), விக்னேஷ் மனைவி சாதனா (23) மற்றும் பழனியம்மாள் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் பேருந்தில் மலர்க்கொடியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.