முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு

கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பொதக்குடி ஹாதியா தெருவைச் சேர்ந்த ஜெகபர் சாதிக் மகன் ஜாவித் (15). இவர், மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை காதிரியா லைன் என்ற இடத்தில், நண்பர்களுடன் ஜாவித் பந்து விளையாடியபோது, பந்து அருகில் உள்ள மாடியில் விழுந்ததாம். அந்த பந்தை எடுக்கச் சென்ற ஜாவித் அங்கிருந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்துவிட்டாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்து  ஜாவித் உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, ஜாவித்  உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.