திருவாரூா்: மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி.முருகையன் கொலையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதால், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொறுப்பாளா் ம. ஐயப்பன், மாவட்டச் செயலாளா்கள் எஸ். முத்தழகன் (நாகை), உத்திராபதி (தஞ்சாவூா்), அசோக் (கரூா்), மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.