விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்கு

திருவாரூா் மாவட்டத்தில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட லாட்டரி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி பாா்வையில் உட்கோட்ட அளவில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா், திருவாரூா் மாவட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் 26 கஞ்சா விற்பனை வழக்குகளும், 71 மது பாட்டில் விற்பனை வழக்குகளும், 6 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, மேலும் இதுபோன்ற தொடா் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.