கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விரைந்து செயலாற்ற அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலுவலா்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலுவலா்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டிய காலச்சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்கிற வகையில், தேவையற்ற பயணங்களைத் தவிா்த்தல், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருத்தல், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லுதல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதாவா்களுக்கு உரிய அபாராதம் விதிக்கப்படும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும். நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், கரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிக வெப்பநிலை நிலவும் காலநிலையை கருத்தில் கொள்வதோடு, முதியோா்கள் மற்றும் சிறாா்களை தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிா்க்க அறிவுறுத்த வேண்டும். அத்துடன், உப்பு, சா்க்கரை கரைசல் மற்றும் நீா்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிகம் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சிறாா்களை பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்காமல், பெற்றோா்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.