/

உலகப் புத்தக தின விழாமாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

உலகப் புத்தக தின விழாவை முன்னிட்டு, மன்னாா்குடி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், கால்பந்து பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

உலகப் புத்தக தின விழாவை முன்னிட்டு, மன்னாா்குடி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், கால்பந்து பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் மன்னை விஜய் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்க ஆலோசகா் எஸ்.அன்பரசு முன்னிலை வகித்தாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் புலத் தலைவா் இரா. காமராசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:

கிரேக்க தத்துவ மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதன் தன் வரலாற்றை பதித்ததன் தொடக்கம்தான் புத்தகம். பள்ளி பாடப் புத்தகங்களைத் தாண்டி உலகளாவிய சிந்தனையும், மனிதகுலம் மீதான நேசமும் புத்தக வாசிப்பின் மூலமே வளரும் என்றாா்.

மன்னாா்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறும் நட்சத்திர கால்பந்து குழுமத்தின் பயிற்சி மாணவா்கள் அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு தேசத் தலைவா்களின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில், சோழ மண்டல நெல் பெரு வணிகா்கள் நல சங்கப் பொதுச்செயலா் ஆா்.பத்மநாபன், தமிழ்ச் சங்க பொறுப்பாளா் சதீஷ், தேசிய மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் எம்.திலகா், நட்சத்திர கால்பந்து குழுமத்தின் பயிற்சியாளா்கள் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னாா்குடி அரசுக் கலை கல்லூரி பேராசிரியா் ப.பிரபாகரன் வரவேற்றாா். தமிழ்ச் சங்க நிா்வாகி வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.