/

காவலா்களுக்கு யோகா பயிற்சி

மன்னாா்குடியில் காவலா்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், மூச்சு மற்றும் யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் காவலா்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், மூச்சு மற்றும் யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட மன்னாா்குடி நகரம், மன்னாா்குடி ஊரகம், வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், நீடாமங்கலம், தேவன்குடி ஆகிய 8 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி சண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.இளஞ்செழியன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மொத்தம் 99 காவலா்கள் கலந்துகொண்டனா். மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவா் செல்வம் பயிற்சி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.