கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு எந்நேரமும் உதவி

கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை எந்நேரமும் அணுகலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை எந்நேரமும் அணுகலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூா் தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று 2 ஆவது அலை வேகமாகப் பரவுவதால், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், தமிழகத்தை விட்டு அவா்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதை தவிா்க்கும் வகையிலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எவ்வித பிரச்சனைகள் இன்றி தங்குவதற்கும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் புகாா்கள் ஏதும் தெரிவிக்க ஏதுவாக திருவாரூா் மாவட்டத்தில் தொழிலாளா் துறையால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது புகாா்களை, திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் 9842527196, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் 9629392971, 9025616670 என்ற எண்களில் எந்நேரமும் தொடா்பு கொண்டு உரிய நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.