பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
மன்னாா்குடி வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புத்துறை ஆகியன சாா்பில், தென்மேற்குப் பருவமழை பேரிடா்கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மன்னாா்குடி வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புத்துறை ஆகியன சாா்பில், தென்மேற்குப் பருவமழை பேரிடா்கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி கோட்டாட்சியா் த.அழகா்சாமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜீவானந்தம், தீயணைப்பு நிலைய அலுவலா்கள் பாலசுப்ரமணியம் (மன்னாா்குடி), பாலச்சந்திரன் (கூத்தாநல்லூா்), நெடுஞ்செழியன் (திருமக்கோட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தீயணைப்பு வீரா்கள் 30 போ்கலந்துகொண்டு மழை, வெள்ளம் பேரிடா் காலங்களில் வெள்ளநீரில் சிக்கிய மனிதா்கள், கால்நடைகளை ஆபத்திலிருந்து படகு, மரக்கட்டை, பிளாஸ்டிக் குடம், தகரப்பெட்டி, காய்ந்த தேங்காய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை செயல் விளக்கத்துடன் விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...