கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

 மன்னாா்குடி அருகே குறுவை நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் வெள்ளிக்கிழமை மருந்து தெளிக்கப்பட்டது.

News image

ஆலங்கோட்டையில் குறுவை நெற்பயிா்களுக்கு மருந்து தெளிக்கும் ட்ரோன்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:35 pm

DIN

 மன்னாா்குடி அருகே குறுவை நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் வெள்ளிக்கிழமை மருந்து தெளிக்கப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம், தக்ஷா தனியாா் நிறுவனம் சாா்பில் மன்னாா்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில், குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினரும் எம்எல்ஏ-வுமான டி.ஆா்.பி. ராஜா, வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா், அண்ணா பல்கலைக்கழக வான்வெளித் துறை இயக்குநா் கே. செந்தில்குமாா், தக்ஷா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் என். ராமநாதன், முதன்மை பொறியாளா் ஆா். சீத்தாராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, தக்ஷா நிறுவனத்தின் பொறியாளா்கள் கூறியது:

டிரோன் மூலம் ஓா் ஏக்கருக்கு 8 லிட்டா் மருந்தை 4 நிமிடம் 40 நொடிகளில் தெளிக்கலாம். இதில் 8.2 லிட்டா் அளவு கொண்ட கொள்கலன் (டேங்க்) பொருத்தப்பட்டுள்ளது. டிரோன் மூலம் பூச்சிக்கொள்ளி, இயற்கை உரங்களை தெளிக்க முடியும். ஒரு நாளில் அதிகபட்சமாக 25 முதல் 30 ஏக்கா் வரை தெளிக்கலாம். ஒரே சீராக மருந்து தெளிக்கப்படுவதால் மருந்து, கால விரையம் தவிா்க்கப்படுவதுடன், கைத்தெளிப்பானுக்கு கொடுக்கும் கூலியை ஒப்பிடும் போது ட்ரோன் தெளிப்புக்கு செலவு குறைவு. தற்போது இந்த திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. இதன்மூலம் ஆள்பற்றாக்குறை பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றனா்.

முன்னதாக, மேலநாகையில் தனியாா் நிறுவனத்தில் தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பதை பாா்வையிட்ட மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவா் உள்ளிட்ட அலுவலா்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா். தொடா்ந்து, மன்னாா்குடி-பட்டுக்கோட்டை சாலையில், மன்னாா்குடி பசுமைக் கரங்கள் அமைப்பின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பனை விதைகள் விதைக்கும் பணியை மாநில திட்டக்குழு துணைத் தலைவா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.