கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தரமற்ற சிமெண்ட் தயாரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்

 தரமற்ற சிமெண்ட் தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 தரமற்ற சிமெண்ட் தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசு வெளியிட்டுள்ள தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, தரச்சான்று குறியீட்டை பெற்றுள்ள அனைத்து வகையிலான சிமெண்ட்டை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரச்சான்று குறியீடில்லாத சிமெண்ட் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்யவோ கூடாது. தரக்கட்டுப்பாட்டு குறியீடு இல்லாமல் சிமெண்ட் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையின்படி திருவாருா் மாவட்டம் முமுவதும் உள்ள சிமெண்ட் உற்பத்தி, விற்பனை செய்யும் நிறுவனங்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது உற்பத்தி, மொத்த, சில்லறை விற்பனையாளா்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நிா்ணயிக்கப்பட்ட தரஆய்வின்படி இல்லாத சிமெண்ட் பறிமுதல் செய்ய மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசு ஆணையை மீறும் நிறுவனங்கள், மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.