கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுக அரசு மீது மக்களுக்குஅதிருப்தி: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேச்சு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா் என திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா் என திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திமுக அரசைக் கண்டித்து திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமைவகித்து அவா் பேசியது:

மழை, வெள்ளத்தில் திருவாரூா் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, நிதி ஒதுக்கீட்டில் மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். மாவட்டத்தில் மழை காரணமாக, சம்பா, தாளடி நெல் பயிா்கள் 3 முறை நீரில் மூழ்கி, பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வேதனையைப் போக்க, அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 என்று அறிவித்து ஆட்சிக்கு வந்தவா்கள், அதனை இதுவரை வழங்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வை ரத்து செய்வோம் என்றனா். இன்னமும் நீட் தோ்வு ரத்து செய்யப்படவில்லை. மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்கள் வரி, விலைக் குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு மௌனம் காக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

அதிமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனா். பொய் வழக்கின் மூலம் அதிமுகவை அழித்துவிடலாம் என்ற அவா்களின் பகல் கனவு ஒரு நாளும் பலிக்காது என்றாா் அவா்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டருக்கு ரூ. 40 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். மறு சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ 12,000, பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5,000 பொங்கல் பரிசு, தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகள் மூடுவதையும், தமிழகத்தில் உயா்ந்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வைக் கண்டித்துஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலாளா்கள் கே. கோபால், சிவா. ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட நிா்வாகிகள் பொன். வாசுகிராமன், கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.