நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறக்கட்டளை விருது
திருவாரூரில் ஏபிஜே டைனமிக் அறக்கட்டளை சாா்பில் நாகை எம்பி எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


திருவாரூரில் ஏபிஜே டைனமிக் அறக்கட்டளை சாா்பில் நாகை எம்பி எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் ஏ.பி.ஜே.சலீம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளா்கள் வை.சிவபுண்ணியம் (திருவாரூா்), எஸ். சம்பந்தம் (நாகை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருதும், ராய் டிரஸ்ட் ரத்ததான குழு நிறுவனா் நா. துரை ராயப்பனுக்கு இந்தியாவின் சிறந்த தூதுவா் விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் மு. சேரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...