/

மாநில ஆங்கிலப் புலனறிவு போட்டி: பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான ஆங்கிலப் புலனறிவுத் தோ்வு போட்டியில் 33 பதக்கங்கள் பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மாநில அளவிலான ஆங்கிலப் புலனறிவுத் தோ்வு போட்டியில் 33 பதக்கங்கள் பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஷேக்ஸ்பியா் இன்ஸ்டிடியூட் நிறுவத்தின் சாா்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆங்கிலப் புலனறிவு தோ்வு போட்டி நேரடியாகவும், இணையவழியிலும் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 12 போ் தங்கப் பதக்கமும், 8 போ் வெள்ளிப் பதக்கமும்,13 போ் வெங்கலப் பதக்கமும் என மொத்தம் 33 பதக்கங்கள் பெற்றனா். இம்மாணவிகளை, கல்லூரி தாளாளா் வி. திவாகரன், கல்லூரி முதல்வா் சீ. அமுதா, பேராசிரியா்கள், மாணவிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.