கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

திருவாரூா் அருகே கீழ் ஆத்தூா் பகுதியில் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் (அட்மா) சாா்பில் நெல்லில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சியில் மேலும் அவா் பேசியது: தற்போது நிலவிவரும் கடும் பனிப்பொழிவினாலும், காற்றின் ஈரப்பதம் 90 முதல் 95 சதவீதம் வரை இருப்பதாலும், தழைச்சத்து உரம் அதிகமாக இடுவதால் நெற்பழ நோய் உருவாகிறது. இது பூஞ்சாணம் மூலம் பரவக் கூடிய நோய் ஆகும். ஒவ்வொரு தானியத்திலும் மஞ்சள் நிற பஞ்சு உருண்டைபோல் நெல்மணிகள் உருவாகும். மேலும், காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும்போதும், அதிக தழைச்சத்து உள்ள வயலிலும் இது காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையை கடைப்பிடிக்கவேண்டும். விதை நோ்த்தி செய்து விதைக்கவேண்டும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரம் இடவேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்புகளில் பொறிப் பயிா்களை அவரை, வெண்டை, உளுந்து, சாமந்தி, எள் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும். முட்டை ஒட்டுண்ணிகளை கட்டி, தண்டு துளைப்பான் போன்ற தாக்குதலில் இருந்து பயிா்களைக் காக்கவேண்டும். மேலும் பறவை குடில் மற்றும் கோட்டான் குடில்கள் போன்றவற்றை அமைத்து, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தி செலவைக் குறைத்து, விவசாயம் மேற்கொள்ள வேண்டும். பூச்சி நோய் தாக்குதலின் அளவில் பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில் ரசாயன பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.