யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒன்றியக் குழு உறுப்பினர் படுகொலை

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒன்றியக் குழு உறுப்பினர் திங்கள்கிழமை காலை கூலிப் படையினரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 7:53 am

DIN

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒன்றியக் குழு உறுப்பினர் திங்கள்கிழமை காலை கூலிப் படையினரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 11-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலூர் கிராமத்தில் உள்ள அப்போதைய திமுக பிரமுகர் மதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் பிணையில் வெளிவந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் 11-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.

பின்னர் அதிமுக அணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்காடு கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் இவர் மீது மோதி கீழே தள்ளிய நிலையில் அதே பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டி தலையை முத்துப்பேட்டை நகருக்குள் கொண்டு சென்றபோது வேகத்தடை அருகே கீழே விழுந்து விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக காவல்துறை தலைவர் ராகேஷ் மீனா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் துரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.