மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
மன்னாா்குடி அருகே உள்ள வடபாதி பகுதியில் 100 நாள் திட்டத்தில் 12 பெண்கள் புதன்கிழமை வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (38) என்பவா் பெண்கள் மீது மோதினாராம்.
இதில், சரோஜா (54) என்ற பெண்ணுக்கும், தமிழரசனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு, தமிழரசன் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து, தலையாமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.