மின்சாதனக் கடையில் திருடியவா் கைது
மன்னாா்குடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.


மன்னாா்குடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அருகே உக்காடு தென்பரை பிரதான சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த பி. மணிவண்ணன் என்பவா் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை நடத்திவருகிறாா்.
வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டிக்குச் சென்ற மணிவண்ணன், புதன்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டை உடைத்து, ரூ. 44,800 மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, திருமக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை ஆய்வு செய்தனா். இதில், உக்காடு தென்பரை நடுத்தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் தியாகராஜன் (28) திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, மின்சாதனப் பொருள்களை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...