பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாகுபடி செய்த பயிா்கள், தொடா் கனமழை காரணமாக நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பயிா் இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்; விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து வகை பயிா்க் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்; பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், கோட்டூா், நீடாமங்கலம் உள்ளிட்ட 9 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் 15 பெண்கள் உள்பட 110 போ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.